GuidePedia

0
சிம்பு குறித்து கேட்டால் “நோ கமென்ட்ஸ்” நழுவும் ஹன்சிகா

நேற்று முதல் கோடாம்பாக்கத்தை கிசுகிசுக்கும் சூடான செய்தி என்னவென்றால் சிம்பு – ஹன்சிகா விடயம்தான். காரணம் சிம்பு நேற்று வெளியிட்ட கருத்து.

நடிகை ஹன்சிகாவுடனான தனது உறவு முறிந்துவிட்டதாக நடிகர் சிம்பு நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது “நோ கமென்ட்ஸ்” என்று பேச மறுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹன்சிகாவுடனான எனது உறவு முறிந்துவிட்டது. தீவிரமாக யோசித்தப்பின் நான் இதை அறிவிக்கிறேன். இப்போது நான் தனியாகத்தான் இருக்கிறேன். ஹன்சிகாவுடன் இனி எப்போதும், எந்த உறவும் இல்லை என சிம்பு நேற்று அறிவித்தார்.

கடந்த கால கதைகள் பற்றி நினைத்து நான் வருத்தப்படவும் இல்லை. மீண்டும் மீண்டும் இதைப் பற்றி யாரும் பேசவேண்டாம். நண்பர்கள், உடன் இருப்பவர்கள், இரசிகர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இதை இப்போது அறிவிக்கிறேன். இனி என்னுடைய தொழிலில் தீவிர கவனம் செலுத்துவேன் எனவும் சிம்பு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே ஹன்சிகா, தான் நடித்து வரும் ‘உயிரே உயிரே’ படத்தின் படப்பிடிப்புக்கு புதிய நண்பர் ஒருவருடன் வருவ தாகவும் தகவல் கசிந்தது. இப்படி இருவருக்குமான பிரச்சினை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், நடிகை ஹன்சிகா காதலர் தினத்தன்று தனது டிவிட்டரில் ‘என்னைப்போல சிங்கிளாக இருக்கும் எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top