மன்னார், திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் இருந்து இன்று புதன் கிழமை மேலும் 3 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இது வரை மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை70 ஆக அதிகரித்துள்ளது.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராத புரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரெட்ண தலைமையில் 26 வது தடவையாக இன்று குறித்த மனித புதை குழியின் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. இதன் போது மேலும் 3 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில் மேலும் 4 எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 51 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் வைததியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நாளை 27 ஆவது தடவையாக மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment