GuidePedia

0
மகசின் சிறைச்­சா­லையில் மர்­ம­மான முறை யில் இறந்த பிரித்­தா­னிய பிர­ஜை­யான விஸ்­வ­லிங்கம் கோபிதாஸ் தொடர்பில் ஓர் முழு­மை­யான விசா­ர­ணையை பிரித்­தா­னியா கோர­வேண்­டு­மென பாரா­ளு­மன்­ற­ உ­றுப்­பி­னரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ள­ரு­மா­கிய சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.
நேற்­றுமுன்தினம் ­காலை மகசீன் சிறைச்­சா­லையில் பிரித்­தா­னிய பிர­ஜை­யான விஸ்­வ­லிங்கம் கோபிதாஸ் (வயது 43) என்­பவர் மர்­ம­மான முறையில் இறந்த நிலையில் மீட்­கப்­பட்­டுள்ளார். இச் சம்­பவம் தொடர்­பாக கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 
 
 
 
இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,
பிரித்­தா­னிய பிர­ஜை­யான 43 வய­தை­யு­டைய விஸ்­வ­லிங்கம் கோபிதாஸ் கடந்த 2007ஆம் ஆண்டு இலங்­கைக்கு வந்­த­போது விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­டை­யவர் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு நீண்­ட­காலம் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு இவரின் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்டு இவ­ருக்கு 05 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இத் தண்­டனைக் காலத்தை லண்டன் சிறையில். அனு­ப­விக்க அனு­ம­திக்­கு­மாறு கோபிதாஸ் வேண்­டுகோள் விடுத்தார். இவரின் கோரிக்கை ஏற்றுக் கொள்­ளப்­பட்டால் அவ்­வாறு செய்யத் தயார் என பிரித்­தா­னியா அறி­வித்­த­போதும் இலங்கை நீதி­ய­மைச்சு அனு­மதி வழங்­க­வில்லை. இதனால் இவர் மகசீன் சிறை­யி­லேயோ தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார்.
 
இந்­நி­லையில் நேற்று முன்தினம் மகசீன் சிறைச்­சா­லையின் சீ பிரி­வி­லுள்ள குளியல் அறையில் மர்­ம­மான முறையில் இறந்து கிடக்க காணப்­பட்­டுள்ளார்.
 
எனவே இம் மரணம் தொடர்பில் முழு­மை­யான நீதி­யான விசா­ரணை வேண்­டு­மென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புக் கோரு­வ­தோடு இம் மரணம் தொடர்பில் நீதி­யான விசா­ர­ணையைப் பிரித்­தா­னி­யாவும் கோர வேண்டும் எனக் கேட்டுக் கொள்­கின்­றது. ஏனெனில் இலங்கை சிறை­களில் கைதிகள் கொல்லப்படுவதோ அல்லது இவ்வாறு மரணமடைவதோ இதுதான் முதற்தடவையல்ல என்பதும் உலகறிந்த உண்மை.
எனவே, இச்சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

Post a Comment

 
Top