GuidePedia

0
சிங்­கள பெளத்­தர்­களின் உரி­மை­க­ளுக்­காக மட்­டு­மல்ல தமிழ் மக்­களின் உரி­மை­களை பாது­காக்கவும் பொது பல­சேனா முன்­னின்று செயற்­ப­டு­கின்­றது என தெரி­விக்கும் அதன் பொது செய­லாளர் கலா­நிதி அத்தே ஞான­சார தேரர், வெளி­நா­டு­க­ளிடம் நாம் பணம் வாங்­கு­வதை அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கா­ர­வினால் நிரூ­பிக்க முடி­யுமா என்றும் சவால் விடுத்தார்.
கொழும்பில்  இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே கல­கொட அத்தே ஞான­சார தேரர் இதனை தெரி­வித்தார்.
எந்­த­வொரு நாட்­டி­ட­மி­ருந்தோ அமைப்­புக்­க­ளி­ட­மி­ருந்தோ அல்­லது அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்தோ நாம் பணம் வாங்­க­வில்லை. மாறாக எமது பக்­தர்கள் வழங்கும் நிதி­யு­த­விகள் மூலமே சிங்­கள பௌத்த மக்­களின் உரி­மை­களை பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்றோம்.
 
அது மட்­டு­மல்­லாது கிழக்கில் தமிழ் மக்கள் தமது தீர்த்து வைக்­கப்­ப­டாத பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ள எம்மை நாடி வரு­கின்­றனர்.
 
இவர்­க­ளுக்­கான அமைச்­சர்கள் எவரும் எப்­போ­தா­வது உதவி செய்­தி­ருக்­கின்­றார்­களா? சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு எதி­ரான அந்­நிய சக்­தி­களின் சதி­களை வெளிப்­ப­டுத்­திய எந்­த­வொரு அமைச்­ச­ரையும் உங்­களால் அடை­யாளம் காட்ட முடி­யுமா? அவ்­வா­றா­ன­வர்கள் இன்று பொது­பல சேனா வெளி­நா­டு­க­ளிடம் பணத்தை வாங்­கிக்­கொண்டு வெளி­நாட்டு தலை­யீட்­டுக்கு துணை போகின்­றது என குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.
 
முடிந்தால் அமைச்சர் வாசு நாம் பணம் வாங்­கி­யதை நிரூ­பித்துக் காட்ட முடி­யுமா என சவால் விடுக்­கின்றேன்.
இந்த குற்­றச்­சாட்டை நிரா­க­ரிக்­கின்றேன். இட­து­சா­ரிகள் எனக்­கூறிக் கொள்­ப­வர்­கள்தான் நாட்டை பிரி­வி­னை­வா­தத்­திற்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நிரலை ஆத­ரிப்­ப­தோடு சர்­வ­தேச நாடுகளுக்கு எமது நாட்டுக்கு எதிரான விதத்தில் மறைமுகமாக சாட்சியங்களை வழங்குகின்றன.
 
சிங்களமாகட்டும் தமிழாகட்டும் முஸ்லி மாகட்டும் இதனூடான அடிப்படை வாதத் தையே நாம் எதிர்க்கின்றோம்.

Post a Comment

 
Top