கிளிநொச்சி ஆனந்தபுரத்தினைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கணபதிப்பிள்ளை இந்தஉதயம் (35) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். குறித்த சந்தேகநபரி;ன் நண்பர்களால் பொலிஸுக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் ஏற்கனவே திருமணப் பதிவு மேற்கொள்ளாத நிலையில் கிளிநொச்சியிலுள்ள பெண்ணொருவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் பிள்ளையொன்றும் உள்ளது இந்நிலையில், தட்டாதெருவில் வசிக்கும் பெண்ணொருவரிடம் ஐந்து இலட்சம் ரூபா சீதனம் பெற்றுக்கொண்டு அப்பெண்ணை திருமணம் செய்ய முற்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து திருமண வீட்டுக்குச் சென்ற பொலிஸார், மணக் கோலத்திலிருந்த மணமகனை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment