மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி 21 ஆவது தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தோண்டப்பட்ட போது குறித்த புதை குழியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதோடு ஒரு தொகுதி மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ன தலைமையில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றது.
இதன் போது மேலும் 1 மனித எலும்புக்கூடு உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஒரு தொகுதி மனித எச்சங்களும் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது வரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் தொகை 59 ஆக அதிகரித்துள்ளது.
கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில் மேலும் 2 மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது வரை 33எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மீண்டும் நாளை குறித்த அகழ்வுப்பணிகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment