ஆணுறைகளினுள் தங்கத்தை இட்டு அதனை
விழுங்கி வயிற்றினுள் வைத்து கொண்டுச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க
விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த கொழும்பைச் சேர்ந்த 36 வயதுடைய நபர்
ஒருவரும், மீகொட பகுதியைச் 44 வயதுடைய நபர் ஒருவருமே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்;து தங்க உருண்டைகள் இடப்பட்ட 12 ஆணுறைகள்
மீட்கப்பட்டுள்ளதோடு கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 37 இலட்சத்து 60
ஆயிரம் ரூபா என சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment