GuidePedia

திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எம்.பி. பேசியதாவது:-
FILE

திமுக தொண்டர்கள் கட்சியை நேசிப்பதுபோல் என்னையும் நேசிக்கின்றனர். கட்சியில் தவறு செய்யாதவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது புரியவில்லை. யாரோ போஸ்டர் ஒட்டினார்கள் என்பதற்காக கட்சியில் இருந்து நிர்வாகிகளை நீக்கியது வருத்தம் அளிக்கும் செயலாகும்.

இதனை தலைமையிடம் நியாயம் கேட்பதற்காக சென்றேன். அதற்காக என்னையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து விட்டார்கள். தனியார் தொலைக்காட்சியில் நான் பேட்டி கொடுப்பதாக போஸ்டர் ஒட்டியவர்களையும் நீக்கி விட்டனர்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சி நிர்வாகிகளை நீக்குவது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. இப்படி கட்சி நிர்வாகிகளை நீக்கி விட்டு பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பார்கள் என்று அவர் பேசினார்.
 
Top