சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் இசையை அமிதாப் பச்சன் மார்ச் 9ம் திகதி சென்னையில் வெளியிடுகிறார்.
சரத்குமார், நாசர், ஜாக்கி ஷராப், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
“மோஷன் கப்சர்” எனும் தொழில்நுட்பத்தில் இப்படம் முழுவதையும் தயார் செய்து இருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தினை ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் திகதி சென்னையில் நடைபெற இருக்கிறது.
எனினும், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ‘எங்கே போகுதோ வானம்’ என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
ரஜினிகாந்த் சொந்தக் குரலில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் என்பதும் இந்தத் திரைப்படத்தின் சிறப்பம்சமாகும்.
இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.
‘கோச்சடையான்’ இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சிறப்பு விருந்தினராக நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொள்ளவுள்ளார்.
அமிதாப் பச்சன் கலந்துகொள்ள இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
‘எந்திரன்’ இந்திப் பதிப்பின் இசையை அமிதாப் பச்சன் தான் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment