ஹொங்கொங்கில் 'எச்7என்9' பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்றுக்குள்ளாகி மூன்றாவது நபர் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அயல் நாடான சீனாவிலுள்ள ஷென்ஸென் நகருக்கு பயணத்தை மேற்கொண்டு திரும்பிய 75 வயது நபரொருவரே பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி ஹொங்கொங்கிலுள்ள துயன் முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை காலை மரணமாகியுள்ளார்.
அயல் நாடான சீனாவிலுள்ள ஷென்ஸென் நகருக்கு பயணத்தை மேற்கொண்டு திரும்பிய 75 வயது நபரொருவரே பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி ஹொங்கொங்கிலுள்ள துயன் முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை காலை மரணமாகியுள்ளார்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பறவை இனங்களில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டதையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகள் உள்ளடங்கலான சுமார் 22,000 பறவைகள் அழிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி நபர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் அந்நாட்டில் கடந்த 14 ஆம் திகதி 65 வயது நபரொருவரும் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் 80 வயது நபரொருவரும் பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி மரணமாகியுள்ளனர்.
இதற்கு முன் அந்நாட்டில் கடந்த 14 ஆம் திகதி 65 வயது நபரொருவரும் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் 80 வயது நபரொருவரும் பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி மரணமாகியுள்ளனர்.
அவர்கள் இருவரும் மரணமாவதற்கு சில தினங்களுக்கு முன் சீனாவிற்கு விஜயத்தை மேற்கொண்டு திரும்பியிருந்தமை குறிப் பிடத்தக்கது.

Post a Comment