மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் காணாமல்போனதாக தெரிவிக்கப்பட்ட வயோதிபரின் சடலமொன்றினை நரிகள் உண்ட நிலையில் தாம் மீட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை மாலை கட்டுமுறிவு குளத்தின் காட்டுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அம்பந்தனாவெளி கதிரவெளியைச் சேர்ந்த வைரமுத்து இளையதம்பி வயது(65) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி நபர் வயல் வேலைக்காக குறித்த பிரதேசத்திற்கு சென்றதாகவும் நீண்ட நாட்கள் ஆகியும் வீடு திரும்பாமையினால் சந்தேகமுற்ற உறவினர்கள் வாகரை பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்போது பொலிசார் குறித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது 5 நாட்களின் பின்னர் சடலம் குளத்தின் காட்டுப்பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சடலத்தின் மீது காயங்கள் காணப்படுவதாகவும் இவை காட்டில் வாழும் விலங்குகளினால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பிரேத பரிசோதனையின் பின்பு இன்று உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படுமென வாகரை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment