மங்காத்தாவிற்கு பிறகு பில்லா-2 தோல்வியடைந்தபோதும், ஆரம்பம், வீரம் படங்களின் ஹிட் காரணமாக கோடம்பாக்கத்தில் அஜீத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அஜீத் புதிய கதைகளை மிகவும் கவனமாக தெரிவு செய்கின்றார்.
தன்னை வைத்து வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்களாக இருந்தாலும், கதை தனக்கு பிடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அஜீத்தின் திரைப்படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா இரண்டு பேரும் மீண்டும் அவரிடம் கதை சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், அந்த படங்களில் நடிப்பது குறித்து அஜீத் இன்னும் முடிவு எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தற்போது ‘அனேகன்’ திரைப்படத்தை இயக்கி வரும் கே.வி.ஆனந்த் சொன்ன கதை அஜீத்துக்கு மிகவும் பிடித்து உள்ளதாம்.
இந்த கதைதான் ரஜினிக்காக அவர் உருவாக்கிய கதையாம். அதனால் கதையில் எந்த திருத்தமும் சொல்லாமல் அப்படியே இருக்கட்டும் என்று அஜீத் சரி சொல்லி விட்டாராம்.
மார்ச் மாத இறுதியில் கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கும் அஜீத், அந்த படம் முடிந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

Post a Comment