GuidePedia

0

கல்முனையில் கடந்த 300 வருடம் பழமைவாய்ந்த தமிழர்களின் பூர்வீக கிராமாக அமைந்துள்ள கல்முனை தரவைப் பிள்ளையார் கோவில் வீதியை கடற்கரைப் பள்ளிவாசல் வீதி என பெயர் மாற்றத்தை கண்டித்து அமைதிப் பேரணி இன்று (10) காலையில் இடம்பெற்றது.  

1796024_628039610583283_279951316_o


கல்முனை மாநகரசபையின் மாதாந்த ஒன்று கூடல் அண்மையில் நடைபெற்றபோது தரவைப் பிள்ளையார் கோவில் வீதி என கோவிலின் முன்னாள் செல்லும் வீதியை கடற்கரைப் பள்ளிவாசல் வீதி என பெயர்மாற்றம் செய்ய மாநகரசபையினால் எடுக்கப்படும் முயற்சியை கண்டித்து கல்முனை வாழ் தமிழ் பொது மக்கள், பொது அமைப்புக்களும் விடுத்த அழைப்பையடுத்து இன்று காலை 9.00 மணிக்கு தரவைப் பிள்ளையார் ஆலயத்தின் இருந்து அமைதிப் பேரணி ஆரம்பித்தது. 
1836894_628040417249869_1340695742_o

இவ் பேரணியில் கல்முனை இந்து ஆலய பிரதமகுருக்களும் கல்முனை விகாராதிபதி, கிறிஸ்தவ பாதிரியார். தமிழரசுக் கட்சி மாகாணசபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் பெண்கள் உட்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு இன ஒற்றுமையை குலைக்காதே, அன்று சாய்ந்தமருது இன்று தரவைக்கோவில் வீதி நாளை?, புனித பள்ளிவாசலை நிறுத்தி இன உறவுக்கு வேட்டா. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளிடம் ஒருமுகமும் கல்முனை தமிழர்களிடம் மறுமுகமும் காட்டாதே, என்ற சுலோகங்கள் ஏந்தியவாறு அமைதி பேரணியாக கல்முனை மாநகரசபை மற்றும் கல்முனை தமிழ் பிரதேச செயலகம், முஸ்லிம் பிரதேச செயலகம் வரை சென்று பகல் 11 மணிக்கு மகஜர்களை மாநகர ஆணையாளர். பிரதேச செயலாளர்களிடம் கையளித்து கலைந்துசென்றனர்

Post a Comment

 
Top