பத்து ஆண்டுகளுக்கு மேலாக, கோலிவுட், டோலிவுட் சினிமாக்களில் வலம் வந்தவர் த்ரிஷா. பின், இந்தியிலும், ஒரு படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம், தோல்வியடைந்து விட்டதால், இந்தியில் நடிப்பதை த்ரிஷா விரும்பவில்லை. இதன்பின், மீண்டும் தமிழ் படங்களில் நடித்து வந்த அவருக்கு, வாய்ப்புகள் குறைந்து விட்டன. அதனால், அவர் இதுவரை திறமை காட்டாத கன்னட சினிமாவிற்குள் நுழைந்து, அடுத்தபடியாக மலையாள சினிமாவிலும், நடிக்க முயற்சி எடுத்து வருகிறார். அவர் கூறுகையில்,மலையாள
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. மலையாளத்தில், மோகன்லால் தான், எனக்கு பிடித்த ஹீரோ என, பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார்.
மலையாளத்தில் நல்ல கதை கிடைத்தால், பாலக்காட்டில் குடியிருக்கும் தன் பாட்டியின் வீட்டிற்கே குடிபெயர்ந்து விடவும் திட்டமிட்டுள்ளாராம்.

Post a Comment