GuidePedia

0
உலகில் ஒவ்­வொரு வரு­டமும் ஒரு மில்­லியன் குழந்­தைகள் பிறந்து 24 மணி நேரத்­துக்குள் இறப்­ப­தாக சேவ் த சில்ட்ரன் அமைப்பு செவ்­வாய்க்­கி­ழமை அறிக்­கை­யிட்­டுள்­ளது.
2012 ஆம் ஆண்டில் மட்டும் உலகில் சுமார் 6.6 மில்­லியன் சிறு­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பிரித்­தா­னி­யாவை அடிப்­ப­டையாகக் கொண்டு செயற்­படும் மேற்­படி அமைப்பு அறிக்­கை­யிட்­டுள்­ளது.
 
அவற்றில் பல மர­ணங்கள் தவிர்க்­கக்­ கூ­டிய கார­ணங்­களால் இடம்­பெற்­றுள்­ள­தாக அந்த அமைப்பு கூறு­கின்­றது.
 
அத்­துடன் தின­சரி 5 வய­துக்கு கீழ்ப்­பட்ட 18,000 சிறு­வர்கள் மர­ண­ம­டைந்து வரு­வ­தா­கவும் அவற்றில் பல தடுத்­தி­ருக்­கக்­கூ­டி­யவை எனவும் சேவ் த சில்ட்ரன் குறிப்­பிட்­டுள்­ளது.
 
பிறந்து ஒரு நாளுக்குள் மர­ணத்தைத் தழுவும் குழந்­தைகள் தொடர்பில் அதி­கூடிய விகி­தா­சா­ரத்தைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்­ளது.
 
அங்கு ஒவ்­வொரு 1000 பிறப்­பு­க­ளுக்கு 40.7 என்ற வகையில் புதி­தாக பிறந்த குழந்­தைகள் 24 மணி நேரத்­துக்குள் மர­ண­ம­டைந்து வரு­கின்­றன.
 
பாகிஸ்­தா­னுக்கு அடுத்த நிலையில் நைஜீரியா, சியரோ லியோன், சோமாலியா, கினியா பிஸாயு, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.

Post a Comment

 
Top