GuidePedia

0
இலங்கை, இந்­தியா மற்றும் சீனா ஆகிய நாடு­களை பல துண்­டு­க­ளாகப் பிரித்­து­விடும் நோக்­கி­லேயே அமெ­ரிக்கா செயற்­ப­டு­கி­ன் ­றது. இந்த நாடு­களை பல பிரி­வு­க­ளாக பிரித்­து­
விட்டால் அதுவே அமெ­ரிக்கா அடை­கின்ற பாரிய அர­சியல் வெற்றியாக கருதப்படுகின்றது என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசா­நா­யக்க தெரி­வித்தார்.
 
தெற்­கா­சி­யாவை மேற்கு நாடு­களின் சூறை­யாடும் பிராந்­தி­ய­மாக உரு­வாக்­கு­வ­தற்கு சில சதி முய்­சிகள் இடம்­பெ­று­கின்­றன. இதனை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தடுக்­கின்­ற­மையின் கார­ண­மா­கவே இலங்கை மீது பாரிய அழுத்­தங்கள் விடுக்­கப்­ப­டு­கின்­றன என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.
 
யுத்­தத்தின் பின்னர் இலங்­கை­யுடன் இந்­தியா சிறி­ய­ள­வி­லான கோபத்­துடன் இருக்­கின்­றமை தெரி­கின்­றது. ஆனால் இது தற்­கா­லி­க­மா­னது. விரைவில் இந்த கோபத்தை இல்­லாமல் செய்­து­வி­டலாம் என்றும் அமைச்சர் எஸ்.பி. திசா­நா­யக்க குறிப்­பிட்டார்.
 
கொழும்பில் உள்ள சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
 
அவர் இந்த விடயம் குறித்து மேலும் கூறி­ய­தா­வது,
 
யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை விட­யத்தில் இந்­தியா சற்று கோபத்­துடன் இருப்­ப­தா­கவே நாங்கள் உணர்­கின்றோம். தமிழ்­நாட்டின் அழுத்­தங்கள் மற்றும் இந்­திய தேர்­தல்­களே இதற்கு மிகப் பிர­தான காரணம் என்று அறி­கின்றோம். ஆனால் இந்­தி­யாவின் இந்த கோப­மான நிலைமை தற்­கா­லி­க­மா­ன­தாகும். தற்­போதும் இலங்­கையும் இந்­தி­யாவும் சிறந்த நட்பு நாடுகள் என்­ப­துடன் நெருக்­க­மாக செயற்­பட்­டு­வ­ரு­கின்­றன. எனவே விரைவில் இந்த கோப நிலைமை மாறி­விடும் என்று நம்­பு­கின்றோம்.
 
இதே­வேளை ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் அமெ­ரிக்கா ஏன் இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­கின்­றது என்று நாம் பார்க்­க­வேண்டும். அதா­வது இலங்­கையில் புலிகள் அமை ப்பை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் தோற்­க­டி த்­தது. இது அமெ­ரிக்­கா­வுக்கு பிடிக்­க­வி ல்லை.
 
அந்­த­வ­கையில் இலங்கை இந்­தியா மற்றும் சீனா ஆகிய நாடு­களை துண்டு துண்­டு­க­ளாக பிரித்­து­வி­டு­வதே அமெ­ரிக்­காவின் அர­சியல் நோக்­க­மா­க­வுள்­ளது. இந்த நாடு­களை அவ்­வாறு துண்­டு­க­ளாக பிரித்­து­விட்டால் அது அமெ­ரிக்கா அடை­கின்ற பாரிய அர­சியல் வெற்­றி­யாக கரு­தப்­ப­டு­கின்­றது.
 
இதே­வேளை அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச அர­சி­யலை முகா­மைத்துவம் செய்ய தெரி­ய­வில்லை என்றும் அனைத்­தையும் குழ­ப­்பிக்­கொண்­டி­ருப்­ப­தா­கவும் எதிர்க்­கட்­சிகள் கூறு­கின்­றன. இதன் கார­ண­மாக பொரு­ளா­தார தடை விதிக்­கப்­ப­டலாம் என்று கூறு­கின்­றன. ஆனால் நாட்டில் தேர்தல் ஒன்று வந்­த­வுடன் அவ்­வாறு ஒரு அச்­சு­றுத்­தலும் இல்லை என்று எதிர்க்­கட்­சிகள் கூறு­கின்­றன. ஆனால் உண்­மையில் எமக்கு பாரிய சவால் உள்­ளது.
30 வரு­டங்­க­ளாக நாட்டில் நில­விய யுத்­தத்தை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ முடித்தார். யுத்­த­கா­லத்தில் பிர­பா­கரன் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்து இன்று எதிர்க்­கட்­சியோ சரத் பொன்­சே­காவோ கூறு­வ­தில்லை. யுத்­தத்தின் இறு­திக்­கட்­டத்தில் இடம்­பெற்ற விட­யங்கள் குறித்து பேசிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். ஜெனி­வாவில் எமக்கு எதி­ராக பிரே­ர­ணை­யையும் கொண்­டு­வர முயற்­சிக்­கின்­றனர். அதற்கு உள்­நாட்டில் சில சக்­திகள் ஒத்­து­ழைப்பும் வழங்­கு­கின்­றன.
 
ஆனால் எமது அமைச்­சர்கள் உலக நாடு­க­ளுக்கு சென்று எமது பக்க நியா­யத்தை எடுத்­து­ரைத்­து­வ­ரு­கின்­றனர். இந்த யுத்­தத்தை முடித்­ததை அமெ­ரிக்கா விரும்­ப­வில்லை. எனவே தான் இவ்­வா­றான அழுத்­தங்­களை பிர­யோ­கித்­து­வ­ரு­கின்­றனர்.
அந்­த­வ­கையில் தெற்­கா­சி­யாவை மேற்கு நாடு­களின் சூறை­யாடும் பிராந்­தி­ய­மாக உரு­வாக்­கு­வ­தற்கு சில சதி முயற்­சிகள் இடம்­பெ­று­கின்­றன. இதனை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தடுக்­கின்­ற­மையின் கார­ண­மா­கவே இலங்கை மீது பாரிய அழுத்­தங்கள் விடுக்­கப்­ப­டு­கின்­றன.
 
இலங்­கையில் சுயா­தீன நீதித்­துறை இல்லை என்று எவ­ராலும் கூற முடி­யாது. நாட்டில் சட்­டத்தின் ஆட்­சி­ப­டுத்தல் சிறப்­பா­கவே உள்­ளது. என்­று­மில்­லா­த­வாறு இன்று அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
மேலும் முன்னாள் பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்டமையை வைத்தே சுயாதீன நீதித்துறை குறித்து கேள்வியெ ழுப்புகின்றனர். ஏற்றுக்கொள் ளப்பட்ட சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே முன்னாள் பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்டார். நாட்டில் சுயாதீன நீதித்துறை இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

Post a Comment

 
Top