GuidePedia

0
மகா சிவ­ராத்­திரி தினத்தில் வள­மா­ன­தொரு எதிர்­கா­லத்­திற்­கான எதிர்­பார்ப்­புக்கள் நிறை­வேற வாழ்த்­து­கிறேன் என ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்துள்ளார்.
சிவ­ராத்­தி­ரியை முன்­னிட்டு அவர் விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
 
சிவ­பெ­ரு­மானை கௌர­விப்­ப­தற்­காக கொண்­டா­டப்­படும் மகா சிவ­ராத்­திரி விழாவை முன்­னிட்டு இலங்கை வாழ் இந்­துக்­க­ளுக்கு இந்த வாழ்த்துச் செய்­தியை அனுப்­பு­வதில் பெரு­ம­கிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.
 
இன்றை தினம் மகா சிவ­ராத்­திரி விழா கொண்­டாட்­டங்­களில் இலங்கை வாழ் இந்­துக்கள் உல­க­மெங்­கு­முள்ள இந்­துக்­க­ளுடன் இணைந்து கொள்­கின்­றனர். இவ்­வி­ழாவில் சிவ­பெ­ருமான் பார்­வதி அம்­மை­யாரை மணந்த தினத்­தையும் அவ­ரினால் ஆதி நட­னக்­க­லையின் உரு­வாக்கம் பேணுதல் என்­பவை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இர­வையும் நினைவு கூர அனுஷ்­டிக்­கப்­ப­டு­வ­தாக நம்­பப்­ப­டு­கின்­றது. இப்­பண்­டி­கை­யுடன் தொடர்­பு­டைய பல்­வேறு கிரி­கை­களில் விரதம் அனுஷ்­டித்து கோவிலில் இரவில் விழித்­தி­ருத்தல், தானம் வழங்கல், விளக்­கேற்றல் சிவ­பெ­ரு­மானை புகழ்ந்து தேவாரம் பாடுதல் போன்­ற­வையும் அடங்­கு­கின்­றன.
இப்­பண்­டி­கையின் முக்­கிய அம்­ச­மான விளக்­கேற்றல் வைபவம் அறி­யா­மையை அகற்றி ஞானத்தை தேடும் மானிட சமூ­கத்தின் உறு­தி­யான முயற்­சி­க­ளையும் தமது வாழ்­விலும் சமூ­கத்­திலும் சமா­தா­னத்­தையும் ஐக்­கி­யத்­தையும் அடைந்து கொள்­வ­தையும் குறித்து நிற்­கி­றது.
 
இலங்கை வாழ் இந்­துக்கள் எமது சமூ­கத்தில் உள்ள ஏனைய சம­யங்­களை சேர்ந்­த­வர்­க­ளுடன் பல நூற்­றாண்­டு­க­ளாக சகோ­த­ரத்­து­வத்­து­டனும் ஐக்­கி­யத்­து­டனும் வாழ்ந்து வந்­துள்­ளனர். இந்த முக்­கி­ய­மான பண்­டி­கையை உண்­மை­யான ஐக்­கிய உணர்­வு­டனும் புரிந்­து­ணர்­வு­டனும் சுதந்­தி­ர­மாக கொண்­டா­டப்­ப­டு­வ­தற்­கேற்ற சமா­தான சூழல் தற்­போது நாடெங்­கிலும் காணப்­ப­டு­வது மிகுந்த மகிழ்ச்­சியை தரு­கின்­றது.
 
மகா சிவ­ராத்­திரி தினத்தின் பிரார்த்­த­னைகள் இந்த எமது தாய்­நாட்டில் உள்ள எல்லா சமூ­கங்­க­ளுக்கு மத்தியிலும் சமாதானம் ஐக்கியத்துக்கான அவர்களது அர்ப்பணத்தை மேலும் பலப்படுத்துமாக இந்த மகா சிவராத்திரி தினத்தில் வளமா னதொரு எதிர்காலத்திற்கான அவர்களது எதிர்பார்ப்புக்கள் நிறைவேற இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

Post a Comment

 
Top