GuidePedia

0
தமி­ழக முத­ல­மைச்சர் ஜெய­ல­லிதா மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் போன்றே செயற்­பட்­டு­வ­ரு­கின்றார். அவ­ருக்கு தற்­போது வய­தா­கி­விட்­ட­மை­யினால் இவ்­வாறு செயற்­ப­டு­கின்றார் என்று கரு­து­கின்றேன் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசா­நா­யக்க தெரி­வித்தார்.
 
கச்­ச­தீவை கோரு­வ­தற்கு தமி­ழக அர­சாங்­கத்­துக்கு எவ்­வி­த­மான உரி­மையும் இல்லை. கச்­ச­தீ­வா­னது இந்­திய மத்­திய அர­சாங்­கத்­துக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் இலங்­கைக்கு உரித்­தாக்­கப்­பட்­டது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.
கொழும்பில் உள்ள சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
 
அவர் இந்த விடயம் குறித்து மேலும் கூறி­ய­தா­வது,
 
தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் போன்று செயற்­ப­டு­கின்றார். தற்­போது வய­தா­கி­விட்­டது என்­பதால் இந்த நிலையா என்று புரி­ய­வில்லை. பிர­பா­க­ர­னுக்கு எதி­ராக ஒரு காலத்தில் கடு­மை­யாக செயற்­பட்­ட­து­ம­ட்­டு­மன்றி புலி­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்­டவர் இந்த ஜெய­ல­லிதா ஆவார். அவர் இவ்­வாறு திடீ­ரென மறு­பக்கம் மாறி பேசிக்­கொண்­டி­ருப்­ப­தால்தான் மன­நிலை பாதிக்­கப்­பட்­டி­ருக்­குமோஇ என்ற சந்­தேகம் எழு­கின்­றது.
இது இவ்­வாறு இருக்க கச்­ச­தீவை கோரு­வ­தற்கு தமி­ழக அர­சாங்­கத்­துக்கு எவ்­வி­த­மான உரி­மையும் இல்லை. கச்சதீவானது இந்திய மத்திய அரசாங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு உரித்தாக்கப்பட்டது. அதனை தமிழகம் கோர முடியாது.

Post a Comment

 
Top