இலங்கையில் இருந்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை இந்தியாவுக்கு மிகவும் சூட்சுமமாக ஆசனவாயிலில் மறைத்து வைத்து கடத்த முயன்ற பெண்ணொருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்வராவார். கடத்திச் செல்லப்படவிருந்த இரண்டு தங்க கட்டிகளின் நிறை 600 கிராம் என தெரிவிக்கும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசனவாயிலில் தங்க கட்டிகளை மறைத்து கடத்த முயன்று கைது செய்யப்பட்ட இரண்டாவது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment