தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்கிளேயர் பிரதேசத்தில் சென்கிளேயர் நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ளது.
இன்று பகல் தீ பரவியதன் காரணமாக இந்த காட்டுப்பகுதியில் 10 ஏக்கர் காடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவராவது இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தீயை கட்டுகப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment