யாழ். மாவட்டத்தில் இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதிவரை கால்பந்தாட்டக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கினால் நடத்தப்படும் இறுதி
ஆட்டத்தில் டயமண்ட் விளையாட்டுக் கழகமும் நவஜீவன் விளையாட்டுக்
கழகமும் மோதவுள்ளன. இந்த ஆட்டம் கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில் இன்று
பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
டயமண்ட் கழகத்திற்கு சி. நளினிகாந்தனும் நவஜீவன் கழகத்திற்கு ரீ.
நிர்ஷனும் அணித் தலைவர்களாக விளையாடவுள்ளனர். இந்த லீக்
போட்டியில் 42 கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
வலிகாமம் கால்பந்தாட்ட லீக் இறுதி ஆட்டத்தில் யங் ஹென் றிஸ் அணியும்
சண்டிலிப்பாய் கல்வளை விநாயகர் அணியும் இளவாலை புனித ஹென்றியரசர்
மைதானத்தில் நாளைமறுதினம் மின்னொளி யில் இரவு 8 மணிக்கு
எதிர்த்தாடவுள்ளன.
இப்போட்டிக்கு முன்னதாக கண்காட்சிப்போட்டியாக மாதகல் சென்.யோசப்
மகாவித்தியாலய மகளிர் அணியும் இளவாலை கன்னியர்மடம்
மகாவித்தியாலய மகளிர் அணியும் மோதவுள்ளன.
இதனைத் தொடர்ந்து மார்ச் முதலாம் திகதி யாழ்ப்பாணம் கால்பந்தாட்ட
லீக்கிற்கான இறுதி ஆட்டத்தில் பாடும்மீன் அணியும் சென். அன்தனிஸ்
அணியும் பிற்பகல் 3 மணிக்கு விளையாடவுள்ளன.
இதனைத் தொடர்ந்து டய லொக் லீக் சம்பியன் விமானப்படை அணிக்கும்
கார்கில்ஸ் புட் சிட்டி எவ். ஏ. சம்பியன் இராணுவ அணிக்கும் இடையிலான
சம்பியன்களின் சம்பியன் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு போட்டிகளும் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.
லீக்குகளினால் நடத்தப்படும் இறுதிப் போட்டிகள் யாவும் இலங்கை
கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் கிண்ணத்திற்காக
நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment